Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி அவிட்ட விழா கோலாகலம்: கத்தி ... ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமானுஜர் திருமேனியை பாதுகாக்கும் ரகசியம்! ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமானுஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாழடைந்த நிலையில் 16ம் நூற்றாண்டு கோவில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2016
11:08

அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் அடுத்துள்ள கிராமம் பாபுராயன்பேட்டையில், 16ம் நூற்றண்டைச் சேர்ந்த கோவில், பராமரிக்கப்படாமல்  பாழடைந்து கிடப்பது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கிராமத்தில், பழமை வாய்ந்த விஜய வரதராஜர் கோவில் எனும் வைணவத்திரு த்தலம் உள்ளது. 20 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ள இக்கோவில் வளாகம், தற்போது முற்றிலும் சிதிலமடைந்து, காணப்படுகிறது. இக்கோவிலு க்குச் சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளதாகக்கூறப்படுகிறது.

Default Image
Next News

ஸ்ரீரங்கத்திற்கு இணையானது: ஸ்ரீ விஜய வரதராஜபெருமாள் நின்ற திருக்கோலத்தில் மூலவராக அருள்பாலிக்கும் இங்கு, விஜயவல்லித்தாயாரும்  எழுந்தருளியுள்ளார். இந்த வளாகத்திலேயே, ராமர் சீதை, வேணுகோபாலசுவாமி, ராதா ருக்மணி, ஆஞ்சநேயர் ஆகிய சன்னிதிகளும் உள்ளன.  ஆழ்வார்களுக்கும், கருடனுக்கும் சன்னிதி உள்ளது. மேலும் காஞ்சியில் உள்ளது போல் பொன்பல்லி, வெள்ளி பல்லி மண்டபங்களும் காணப் படுகின்றன. உள்பிரகாரத்தில் விஜய புஷ்கரணி தீர்த்தம், வெளிப் பிரகாரத்தில் கமல தீர்த்தம் போன்ற தீர்த்தங்களும் உள்ளன. ஏறத்தாழ ஸ்ரீரங்கம் ÷ காவிலுக்கு இணையான திருத்தலமாக இது விளங்கி வந்ததாகவும் தெரிகிறது. காஞ்சி வரதராஜபெருமாள் ஆண்டுக்கொரு முறை இங்கே எழுந்தரு ள்வது வழக்கம் என்றும் ஆன்மிகப்பெரியவர்கள் கூறுகின்றனர். ஐந்து கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் கொண்ட பிரம்மாண்ட கோவிலாக இது  உள்ளது.

அதிகாரிகள் செய்வரா?:
இக்கோவிலின் புராணப்பெயர் தட்சிணகாஞ்சி என்பதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தத்திருக்கோவிலை  புனரமைத்து, இதன் பெருமையைக் காக்க வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அறநிலையத்துறை  அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆன்மிகப்பெரியோரின் வேண்டுகோள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar