வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு கார்கார்த்தார் உறவின்முறை வீரகாளியம்மன் கோயிலில் வருடாந்திர உற்ஸவ விழா நடந்தது. முதல்நாள் காப்புக்கட்டு வைபவமும் கரகம் எடுத்தலும் நடந்தது. இதில் பெரியஊரணி கரையில் அம்மன் செய்யப்பட்டு ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், நெய்பந்தம் ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரண்டாம் நாளில் பெண்கள் கோயில் முன் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். மாலையில் மஞ்சள் நீராட்டு வைபவமும், அருள்வாக்கு சொல்லும் வைபவமும் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் கரகம் கரைப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டது. பெண்கள், பக்தர்கள் பூக்களை துõவி வழிபட்டு அம்மனை வழியனுப்பி வைத்தனர். மூன்றாம் நாளில் அன்னதானமும், பள்ளயம் பிரித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. கார்காத்தார் உறவின் முறை தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சு.கிருஷ்ணன், கமிட்டி நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.