பதிவு செய்த நாள்
29
ஆக
2016
12:08
ஆர்.கே.பேட்டை: ரமணானந்த சுவாமியின், குரு பூஜை, செப்.,12ம் தேதி நடைபெற உள்ளது. பொதட்டூர்பேட்டை, அகத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ரமணானந்த சுவாமிகள் மடத்தில், 21ம் ஆண்டு, குரு பூஜை, செப்., 12ம் தேதி நடைபெற உள்ளது. காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை சிறப்பு சொற்பொழிவு. 10:00 மணிக்கு, அப்பர் இறைபணி மன்றத்தின் தேவாரம், திருப்புகழ் இன்னிசை. பகல், 12:00 மணிக்கு, சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெறும். மாலை, 4:00 மணிக்கு, சிவனடியார்கள் சிறப்பு என்ற தலைப்பில், சொற்பொழிவு நடக்கிறது.