செஞ்சி: செஞ்சி அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதை முன்னிட்டு காலையில் விநாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய் தனர். அமாவாசையன்று பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு அன்னதானம், 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.