Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுரகிரி மலையில் நவராத்திரி விழா: ... திருப்பரங்குன்றம் கோயிலில் 8 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் பூஜை கட்டணங்களை உயர்த்த முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2011
11:09

திருவனந்தபுரம்: சபரிமலையில், பூஜை நேரத்தில் சுவாமியை தரிசிக்க சிறப்பு கட்டணம் நிர்ணயிக்க எடுக்கப்பட்ட முடிவை, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ரத்து செய்துள்ளது. ஆனால், தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள பிற கோவில்களில் வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியில் இருந்து, பூஜை கட்டணங்கள் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், பூஜை நேரங்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற புதிய கட்டணத்தை தேவஸ்வம் போர்டு அறிமுகம் செய்தது. அதற்கு பல்வேறு சங்கங்களும், பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், வேறு வழியின்றி அத்திட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள பிற கோவில்களில், வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியில் இருந்து, புதிய கட்டணங்கள் அமலுக்கு வருகிறது.

புதிய கட்டணம் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம்): அர்ச்சனை ரூ.10 (ரூ.7), கணபதி ஹோமம் ரூ.40 (ரூ.25), ரத்த புஷ்பாஞ்சலி ரூ.25 (ரூ.15), துலாபாரம் ரூ.45 (ரூ.40), மிருத்யுஞ்ச ஹோமம் ரூ.70 (ரூ.45), சகஸ்ரநாம அர்ச்சனை ரூ.20 (ரூ.13), களபாபிஷேகம் ரூ.450 (ரூ.300), சர்க்கரைப் பொங்கல் ரூ.30 (ரூ.20), பால் பாயாசம் ரூ.25 (ரூ.15), அரவணை ரூ.45 (ரூ.30) என, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு செயலர் பி.ஆர். அனிதா தெரிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலில், பூஜை மற்றும் பிரசாத கட்டணங்கள் வரும் அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

இக்கோவிலில் புதிய கட்டணங்கள் விவரம் வருமாறு: அரவணை பிரசாதம் ரூ.60 (ரூ.50), அப்பம் ரூ.25 (ரூ.20), படி பூஜை ரூ.40 ஆயிரம் (ரூ.30 ஆயிரம்), உதயாஸ்தமன பூஜை ரூ.25 ஆயிரம் (ரூ.20 ஆயிரம்) ஆகவும் இருக்கும்.இப்புதிய கட்டண உயர்வுகள், கேரள மாநில ஐகோர்ட் உத்தரவுபடியே அமலுக்கு வரும் என, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு செயல் அலுவலர் என்.சதீஷ்குமார் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar