பதிவு செய்த நாள்
14
செப்
2016
12:09
திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியலில், ஒரே நாளில், 3.55 கோடி ரூபாய் வசூலானது. திருமலை ஏழுமலையானை தரிசித்த பின், பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை, தேவஸ்தானம் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைக்கிறது. அதன்படி, கடந்த, 11ம் தேதி மாலை முதல், 12ம் தேதி மாலை வரை, காணிக்கை கணக்கிட்டதில், 3.55 கோடி ரூபாய் வசூலானதாக, தேவஸ்தானம் தெரிவித்தது. இதுவே, இம்மாதத்தில் கிடைத்த அதிக வருமானம்.