பதிவு செய்த நாள்
17
செப்
2016
11:09
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரி கிராமத்தில் உள்ள பூரணி புஷ்கலா சமேத ஐயனார், கருப்பையா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம், கடந்த 14ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணிவரை யாகசாலை அலங்காரம், கலசங்கள் அமைத்தல், புனித தீர்த்தம், கொண்டு வருதல் ஆகியவை நடந்தது. மாலை யாக சாலை பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 15ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை, தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று (16ம் தேதி) காலை நான்காம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து 9:15 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு சித்தி விஞாயகர், பூரணி புஷ்கலா சமேத ஐயனார், கருப்பையா, வீரனார், பிடாரியம்மன் சன்னதி கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.