தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி ஞாயிறை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அழகன்குளம் அழகிய நாயகி மகளிர் மன்ற பொறுப்பாளர் பிரேமா ரெத்தினம் குங்கும அர்சனை பூஜைகளை நடத்தினார். தர்மரக்சன சமிதி சார்பில் சரஸ்வதி ஜெபநாம வேள்வி நடந்தது. ஏராளமான பெண்கள் சக்தி ஸ்தோத்திரம், பஜனை செய்தனர். பின் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.