பதிவு செய்த நாள்
21
செப்
2016
12:09
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று மூலவருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், புரட்டாசி மாத முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி, காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வண்ண மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை ராகுகால பூஜையும், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.