Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் கோவிலில் கிருத்திகை விழா பழநி திருஆவினன்குடி கோயிலில் கார்த்திகை பெருவிழா பழநி திருஆவினன்குடி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியை விட புண்ணிய தலம்? வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம்
எழுத்தின் அளவு:
அயோத்தியை விட புண்ணிய தலம்? வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம்

பதிவு செய்த நாள்

22 செப்
2016
11:09

திருப்பூர்: ""ராமன் அவதரித்த அயோத்தியாவை விட, முதன்மையான பூமி, ராமாயணம் தோன்றிய பிட்டூர், என, ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். ராமாயணம் குறித்த ஆன்மிக தொடர் சொற்பொழிவு, திருப்பூர் காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடைபெற்று வருகிறது."நவ புண்ணிய ஸ்தலங்கள் குறித்து, சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது: இந்த பூமியுடன் ஈரேழு பதினான்கு லோகங்களையும் ஆளும் ராமன், இந்த புண்ணிய பூமியாம் பாரத பூமியிலே, அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை, தன் காலடி பட நடந்தார். ராமன் காலடி பட்ட இடமெல்லாம் புண்ணிய ஸ்தலங்களே. அவரது அவதாரங்கள் எண்ணில் அடங்காதது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு சிறப்பு உள்ளது. மலை, நதி, காடு, கோவில், குளம், ஊர் என அனைத்துமே, இறைவனோடு தொடர்புள்ளது. தியாகம், வேள்வி, தீர்த்த யாத்திரை, கல்வி, தானம், தர்மம் என, எதை எங்கு செய்ய வேண்டும் என உள்ளது. அப்படி செய்யும் போது தான், அதற்குரிய பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு பிறவிக்கும் காரணம் கர்மம். இறைவன் அவதாரம் கருணையால் தோன்றியது; மனிதப்பிறவி கர்மாவால் ஏற்பட்டது. இதில் தீய கர்மாவால் ஏற்பட்ட பிறவி, கடினமான கர்மாக்களை கொண்டது. இதை கரைக்க, இறை சேவை செய்ய வேண்டும். அதற்காகவே புண்ணிய ஸ்தலங்களை தேடி செல்கிறோம். யாத்திரையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். யாத்திரை செல்ல வேண்டிய நவ புண்ணிய ஸ்தலங்கள், பிட்டூர், அயோத்தியா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, உஜ்ஜயின் மற்றும் துவாரிகா ஆகியன. இதில் முதன்மையான இடம் பிட்டூர். பூலோகம் வந்த பிரம்மன், முதலில் காலடி வைத்த இடம் இங்குள்ளது. வால்மீகியின் ஆஸ்ரமம் உள்ளது. ராமாயணம் எழுத துவங்கிய இடம் இது. ராமன் பிறந்த இடத்தை விட, ராமாயணம் துவங்கிய இடம் முதன்மையானது. ராமனின் புராணத்தை நாம் அறியச்செய்த இடம், பிட்டூர். எனவே, அயோத்தியாவை காட்டிலும் இது முதன்மையானது. இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar