விருத்தாசலம் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2016 05:09
விருத்தாசலம்: புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, விருத்தாசலம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. விருத்தாசலம், பெரியார் நகரிலுள்ள ராஜகோபால சுவாமி கோவிலில், காலை 6:00 மணிக்கு விஸ்பரூப தரிசனம் நடந்தது. 8:00 மணிக்கு கால சந்தி பூஜை, 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், 12:00 மணிக்கு திருவேங்கமுடையான் சிறப்பு அலங்காரம், தீபாரதனை மற்றும் அன்னதானம் நடந்தது. சிறப்பு பூஜைகளை கோவில் குருக்கள் சங்கரநாராயண பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேபோல் விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.