திருப்பூர்: திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், பேரவை கூட்டம், அகவல் பாராயணம் ஆகியன நடைபெற்றது.
கருவம்பாளையம், ஜோதிபுரத்தில் உள்ள சங்கத்தில் நடந்த, நிகழ்ச்சிக்கு, ராமசாமி தலைமை வகித்தார். நீறணி பவளக்குன்றன் வரவேற்றார். முன்னதாக, வள்ளலாளர் அகவல் பாராயணம் நடைபெற்றது. பேரவை கூட்டத்தில், 201516ம் ஆண்டு வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான, பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர. ஜோதி வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.