திருக்கருகாவூர் கோயிலில் நவராத்திரி லட்சார்ச்சனை மற்றும் தெப்பத்திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2016 12:09
தஞ்சாவூர்: பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் முல்லைவனநாத சுவாமி உடனுறை கர்ப்பரட்சாம்பிகை கோயிலில் நவராத்திரி இலட்சார்ச்சனை விழா மற்றும் தெப்பத்திருவிழா அக்.1ம் தேதி துவங்குகிறது.
குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரமும், சுகப்பிரசவம் மூலம் குழந்தை செல்வத்தையும், திருமணம் ஆகாத கன்னியருக்கு திருமணம் கூடிவரவும், பிரார்த்தனை செய்வோருக்கு வேண்டுவன எல்லாம் அளித்து தோன்றாத்துணையாக இருந்து வாழ்வில் நல்லன எல்லாம் அருளும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு 1.10.2016 சனிக்கிழமை முதல் 9.10.2016 ஞாயிற்றுக்கிழமை முடிய இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. இலட்சார்ச்சனையில் பங்குபெற விரும்புவோர் ரூ 400/- திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ளலாம். மணியார்டர் மற்றும் டிராப்ட் மூலம் தொகை அனுப்புகிறவர்கள் தங்கள் பெயர், நட்சத்திரம் முதலிய விபரங்களுடன் திருக்கோயில் பெயருக்கு இந்தத் தொகை இலட்சார்ச்சனைக்கு அனுப்பப்படுகிறது என்ற விபரத்துடன் அனுப்பிவைக்க வேண்டுகிறோம். இலட்சார்ச்சனை பிரசாதமாக அம்பாள் படம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.
நிகழ்ச்சி நிரல்:
1.10.2016 (சனிக்கிழமை) முதல் 9.10.2016 ஞாயிற்றுக்கிழமை முடிய நவராத்திரி இலட்சார்ச்சனை விழா 7.10.2016 (வெள்ளிக்கிழமை) ஏகதின இலட்சார்ச்சனை 10.10.2016 (திங்கட்கிழமை) சரஸ்வதி பூஜை 11.10.2016 (செவ்வாய்க்கிழமை) மாலை: 4.00 மணிக்கு- விஜயதசமி சுவாமி வீதியுலா இரவு: 8.00 மணிக்கு- தெப்பத்திருவிழா
தொடர்புக்கு:
நிர்வாக அதிகாரி, அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில், திருக்கருகாவூர், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்- 614 302. 04374-273423, 88700 58269.