புதுச்சேரி வேணுகோபால் சுவாமி கோவிலில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2016 11:09
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால் சுவாமி கோவிலில், புதிதாக உருவாக்கிய கொடி மரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
முத்தியால்பேட்டை தெபேசான்பேட் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு, கடந்த 4 ஆண்டிற்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, கோவிலுக்கு பதிதாக கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ. 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கொடி மரம் தயாரிக்கும் பணி நடந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட கொடி மரம், பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோவில் முன் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீமத் ஆழ்வார் சபையினர் செய்திருந்தனர்.