பதிவு செய்த நாள்
29
செப்
2016
12:09
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், பக்தர்கள், 20 நாட்களில், 46.60 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், 20 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) சிவாஜி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், 46,60,367 ரூபாய் ரொக்கம், 184 கிராம் தங்கம், 978 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.