பதிவு செய்த நாள்
07
அக்
2016
11:10
சபரிமலை: சபரிமலையில் அக்.17ல் புதிய மேல்சாந்தி குலுக்கல் தேர்வும், அக்.20ல் அஷ்டபந்தன கலசமும் நடக்கிறது. ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அக்.16 மாலை ஐந்து மணிக்கு திறக்கிறது. அன்று வேறு விசேஷ பூஜைகள் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். 17ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும், அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் ஆரம்பமாகும். தொடர்ந்து கணபதிஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
மேல்சாந்தி : ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு பூஜைகள் நடத்த புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகிறார். திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகிகள் மற்றும் தந்திரிகள் இணைந்து நடத்தும் நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுபவர்களில் ஒருவர் சன்னிதானத்தில் ஐயப்பன் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். இவர் ஒரு ஆண்டு காலம் சன்னிதானத்தில் தங்கியிருக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான மேல்சாந்தி தேர்வு 17ம் தேதி காலை எட்டு மணிக்கு நடக்கிறது.
பட்டியல் : இதற்காக சபரிமலைக்கு 15 பேர், மாளிகைப்புறத்துக்கு 11 பேர் என இரண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் இரண்டு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.சபரிமலை டி. நாராயணன் நம்பூதிரி வைக்கம், டி. சுரேஷ்குமார் நுறநாடு, டி.தாமோதரன் போற்றி திருச்சூர், வி.என். வாசுதேவன் நம்பூதிரி பெங்களூரு, ஏழிக்கோடு கிருஷ்ணன்நம்பூதிரி எர்ணாகுளம், டி.கே. ஸ்ரீதரன் நம்பூதிரி திருவல்லா, நாராயணன் ஸ்ரீதரன் காசர்கோடு, டி.வி. ஹரிநம்பூதிரி எர்ணாகுளம், வி.எம். பிரதீப்குமார் பெங்களூரு, கே.ஜெயராமன் கண்ணூர். கே.கே. சுப்பிரமணியன் நம்பூதிரி திருச்சூர், டி.எம். உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஒற்றப்பாலம், எ.எஸ். சங்கரன்நம்பூதிரி திருவனந்தபுரம், என். ஸ்ரீகுமார் ஆலப்புழா, என்.கே. ராமன்நம்பூதிரி சாலக்குடி.மாளிகைப்புறம் எம்.என். ரஜிகுமார் அங்கமாலி, டி.எம். உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஒற்றப்பாலம், டி.கே. யோகேஷ் நம்பூதிரி திருவனந்தபுரம், பி.என். முகேஷ் மூவாற்றுப்புழா, கே.ஜெயராமன் கண்ணூர், உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி மாவேலிக்கரை, பி.எம். கணபதி நம்பூதிரி சங்கனாசேரி, எம்.இ. மனுகுமார் சங்கனாசேரி, எம்.வி. ராஜீவ் மலப்புறம், எஸ். ஹரிகுமார் மாவேலிக்கரை, வி.என். அனில்குமார் குஜராத்.
அஷ்டபந்தனகலசம் : 12 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் ஐயப்பன் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன கலசம் 20ம் தேதி நடைபெறும். இதையொட்டி 18ம் தேதி பிராசாத சுத்தி கிரியைகள் நடக்கும். 19ம் தேதி பிம்ப சுத்திகிரியைகள் நடைபெறும். 20ம் தேதி அதிகாலை 4.40 க்கும் ஆறு மணிக்கும் இடையிலான முகூர்த்தத்தில் அஷ்டபந்தன கலசம் நடைபெறும். தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகளை நடத்துகிறார். இதனால் அக்.20,21 தேதிகளில் நெய்யபிஷேகம் கிடையாது.