Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோலாகலமாக துவங்கியது பேய் விரட்டும் ... சபரிமலையில் புதிய மேல்சாந்தி அக்.17ல் தேர்வு! சபரிமலையில் புதிய மேல்சாந்தி அக்.17ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விரலும் மழலையும் இணையும் அறிவின் தருணம் வித்யாரம்பம்
எழுத்தின் அளவு:
விரலும் மழலையும் இணையும் அறிவின் தருணம் வித்யாரம்பம்

பதிவு செய்த நாள்

07 அக்
2016
10:10

மலர்களாய் நீ உதிர்த்த வார்த்தைகள்
மழலை தேசத்தின் மந்திரம்
தெளிவாக பதியாத காலடிகளுக்கு
வண்ணம் பூசினேன் கிருஷ்ணர்
வருவாரென!
சுவற்றிலே உன் கிறுக்கல்...

ரவிவர்மனுக்கான படைப்பின் சவால் குழந்தையின் ஒவ்வொரு அசைவும் தாய்க்கு, ஒரு ஹைகூ கவிதை தான்; பத்து வார்த்தை சேர்ந்து பேசினாலே, பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென்று துடிக்கிறது தாய் மனசு. ஐந்து வயது நிறைந்த பின்பே, ஆரம்பப்பள்ளியில் அடி எடுத்து வைத்த பாக்கியம் பெற்றது, முந்தைய தலைமுறை.

இப்போது தவழ்ந்து, விழுந்து, நின்று, நடந்து, பேச துவங்கியதும், பள்ளியை தேடி, அட்மிஷன் போடும் காலம். விஜயதசமியை எதிர்பார்த்து, வித்யாரம்பம் செய்தபின், பள்ளியில் சேர்க்க காத்திருக்கும் பெற்றோர்களுக்கான, தகவல் இது. வித்யாரம்பம் என்றால், பச்சரிசியில் விரல் பிடித்து, எழுதி, பின், நாக்கில் தங்க ஊசியால், ஓம் ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ என எழுதுவர் என்பது, அனைவரும் அறிந்ததே. இதன் பின்னணியில் ஒளிந்திருக்கும்,

சம்பிரதாயம் சார்ந்த காரணங்கள், பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அது என்னவென்று விளக்குகிறார், கோவை ஐயப்ப சேவா சங்க செயலாளர் விஜயகுமார்...நவராத்திரியின் முக்கிய தெய்வம் துர்க்கை தான். பெண் சக்தியை துணையாக கொண்டு நடந்த வதம், இறுதி நாள் வெற்றியை விவரிக்கும் நிகழ்வே, விஜயதசமி.

மகிஷாசுரனை வதம் செய்த, ஒன்பது இரவுகளை, மூன்று பகுதிகளாக பிரித்து, காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கான பூஜைகள் நடக்கும். பத்தாம் நாள், மகிஷாசுரனை கொன்று, உலகை காப்பாள் துர்க்கை. இந்த வெற்றியின் தினமே, விஜயதசமி. கல்வி, கேள்வி, அறிவில் சிறந்து விளங்கவும், தொழில் சார்ந்த புது முயற்சிகளுக்கு, பிள்ளையார் சுழி போடவும் ஏற்ற நாளாகும். இந்த நாளில், குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் செய்யப்படுகிறது. குழந்தைகள் மணலில் கிறுக்குவது வழக்கம். எழுத்துப்பயிற்சி அளிக்க, பச்சரிசியில் குழந்தையின் விரல் பிடித்து எழுதி, பின் நாக்கில் தேன் தடவி, தங்க ஊசியால், ஓம் ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ என எழுதப்படும். முன்பு, காளிதாசன் என்ற பக்தருக்கு, கல்வி ஞானம் அளிக்க, துர்க்கை சூலத்தால் நாக்கில் எழுதியதாக, புராணங்கள் கூறுகின்றன. இதை முன்னிறுத்தி, நாக்கில் எழுதும் பழக்கம் பின்பற்றப்படுகிறது. இரண்டரை வயது முதலான குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் செய்யலாம், என்றார். -நமது நிருபர்-

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar