பதிவு செய்த நாள்
07
அக்
2016
11:10
திருத்தணி: திருத்தணி பகுதியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன.திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கலில் ஷீரடி சாய்பாபா கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில், நேற்று புரட்டாசி மாத வியாழக்கிழமையையொட்டி, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும்சிறப்பு பூஜைகள்நடந்தன. காலை, 8:00 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு உற்சவர் சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தை ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.