ஊத்துக்கோட்டை:குரு பகவான் கோவில்களில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.சுருட்டப்பள்ளி, சர்வமங்களா சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது தாம்பத்ய தட்சிணாமூர்த்தி சன்னிதி. பெரும்பாலான கோவில்களில் இவர் தனியாக நின்றபடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால், சுருட்டப்பள்ளியில் தன் மனைவி கவுரியை அணைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நேற்று காலை, சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சுவாமி சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், பக்தர்கள் கொண்டை கடலையை மாலையாக அணிவித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர், தாராட்சி லோகநாயகி உடனுறை பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஸ்ரீரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட குரு பகவான் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.