பதிவு செய்த நாள்
12
அக்
2016
09:10
பெற்றோர் மீது பாசம் மிக்க கடக ராசி அன்பர்களே!
செவ்வாய் அக்.25 வரையிலும், புதன் நவ.4 வரையிலும், சுக்கிரன் நவ. 8 வரையிலும் நன்மை தருவார்கள். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தர காத்திருக்கிறார். மற்ற கிரகங்கள் அனைத்தும் திருப்தியற்ற நிலையில் உள்ளன. எந்த பிரச்னை குறுக்கிட்டாலும் அதை சுக்கிரன், புதன் முறியடித்து உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வார். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். செவ்வாயால் மாதத் தொடக்கத்தில் பொருளாதார வளம் இருக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புதிய வீடு, மனை வாங்க யோகமுண்டு. அக்.25க்கு பிறகு வீண் அலைச்சல் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினர் வகையில் தொல்லை உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஆடம்பர வசதிகள் பெருகும். சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்தேறும். நவ.3க்கு பிறகு கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு உருவாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்.19,20, நவ.15ல் உறவினர்களால் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் அக். 30,31 ல் அவர்களின் வகையில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அக்.23,24ல் பெண்கள் உறுதுணையாக இருப்பர். உடல்நலனில் கவனம் தேவை. உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.
தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு, தடை அனைத்தும் அக்.18க்கு பிறகு இருக்காது. அதன்பிறகு லாபம் படிப்படியாக அதிகரிக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். நவ. 4,5ல் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். அக். 21,22,25,26ல் சந்திரனால் தடைகள் வரலாம். நவ.3 க்கு பிறகு வீண் அலைச்சல் அதிகரிக்கும்.
பணியாளர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். தடைகள் அகன்று பதவி உயர்வு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு அக்.18க்கு பிறகு விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும். அக்.17,18 நவ.13,14 தேதிகள் அனுகூலமாக அமையும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை அக்.25க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
கலைஞர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருமானம் காண்பர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். நவ.8க்கு பிறகு முயற்சியில் தடையும், மனச் சோர்வும் ஏற்படும்.
அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். அக்.25க்கு பிறகு சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். நவ.1,2,3ல் செயலில் குழப்பம் ஏற்படலாம் கவனம்.
மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவர். போட்டியில் பங்கேற்று வெற்றி கிடைக்கப் பெறுவர். நவ.4 க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது அவசியம்.
விவசாயிகளுக்கு நெல், சோளம் போன்றவற்றில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து அக்.25க்குள் வாங்கலாம். அதன் பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.ஆனால் வருமானத்திற்கு குறை இருக்காது. வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். தோழிகள் உறுதுணையாக இருப்பர். செவ்வாயால் அக். 25 வரை நன்மை அதிகரிக்கும். அண்டை வீட்டார் நட்புடன் பழகுவர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். நவ. 6,7,8 ல் சகோதரிகளால் உதவி கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வந்து சேரும்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு அக்.17,18,19,20,23,24,27,28,29, நவ. 4,5,6, 7,8,13,14,15 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான கும்ப ராசியில் சந்திரன் நவ. 9,10-ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம்: பச்சை, வெள்ளை
பரிகாரம்: காலையில் நீராடியதும் சூரியனை வழிபடுங்கள். வெள்ளியன்று நாக தேவதையை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு செல்ல தவறாதீர்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்வது நல்லது.