சன்மார்க்க சத்திய சேவா நிலையத்தில் மழை வேண்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2016 12:10
மதுரை, மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா நிலையத்தில் புரட்டாசி மாத பவுர்ணமி பிரார்த்தனை கூட்டம் நடந்தது. மழை வேண்டி வழிபாடு நடந்தது. சிவசங்கர் துவக்கி வைத்தார். ரேகா ஸ்ரீதேவி, கார்த்திகேயன், சிவகார்த்தி, ராஜராமன் ஆகியோர் பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதன் செய்திருந்தார்.