தேனுார்: தேனுார் சுந்தரவல்லியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் உற்சவத்தில் பெண்கள் முளைப்பாரி நேர்த்திகடன் செலுத்தி அம்மனை தரிசித்தனர்.இக்கோயிலில் அக்.,12ல் கொடியேற்றத்துடன் புரட்டாசி உற்சவம் 5 நாட்கள் நடந்தன.நேற்று முன்தினம் இரவு அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் லதா, கிராம கமிட்டி விழா குழுவினர் செய்திருந்தனர்.