தீபாவளி திருநாள், ராமபிரான் இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பிய நாளில் துவங்கியதாக செவிவழிச் செய்தி இருக்கிறது. அவர் கி.மு. 7,292ல் அயோத்தி திரும்பியதாக, மராத்திய மொழியில் ‘வாஸ்தவ ராமாயணம்’ என்ற நுõலை எழுதிய பி.வி.வர்த்தக். ராமன் என்பவர் குறிப்பிடுகிறார். இதன்படி பார்த்தால், இந்த ஆண்டில் 9308வது ஆண்டாக நாம் தீபாவளியைக் கொண்டாடுகிறோம். 14 ஆண்டு வனவாசத்தின் போது, ராவணவதம் முடித்து ராமன் அயோத்தி திரும்பியபோது, அந்நாட்டு மக்கள் தங்கள் வீடுகள் முன்பு தீபங்கள் ஏற்றி அவரை வரவேற்றதே தீபாவளியாகத் தொடர்கிறது. இதன்பின் திருமாலின் கிருஷ்ணாவதார காலத்தில், அவர் நரகாசுரனை அழித்தார். ஒரு கொடுமைக்காரன் ஒழிந்த நாளை மக்கள் மகிழ்வுடன் தீபமேற்றி கொண்டாடினர். இந்நாள் நரக சதுர்த்தசி என அழைக்கப்பட்டது. தீபங்களை வரிசையாக ஏற்றி வழிபட்டதால் ‘தீபாவளி’ ஆயிற்று. தீபாவளி என்றால் ‘தீபங்களின் வரிசை’ என பொருள். காலம் செல்லச் செல்ல சில மாநிலங்களில் தீபம் ஏற்றுவதற்கு பதிலாக பட்டாசு வெடிக்கப்பட்டது. தமிழகத்தில் முருகப்பெருமான் வழிபாடு முக்கியத்துவம் பெற்ற பிறகு, கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டது.