சீக்கியர் பொற்கோவிலை ‘ஹர்மந்திர் சாகிப்’ என்பர். இந்தக் கோவிலின் நிர்வாகி பாயி மணிசிங், அந்நிய ஆட்சியாளர்களுக்கு அடி பணியாததால், கி.பி.1737ல் தீபாவளியன்று லாகூரில் கொல்லப்பட்டார். இதை சீக்கியர்கள் தியாக தினமாக னுசரிக்கின்றனர். சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த சிங், தீபாவளியை சீக்கியர்களின் முக்கிய பண்டிகையான பைசாகிக்கு அடுத்த முக்கியமான திருவிழாவாக கி.பி.1699ல் அறிவித்தார். அன்று முதல் 317 ஆண்டுகளாக சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். கி.பி 1577ம் ஆண்டில் பொற்கோவில் கட்டுமான பணிகளுக்கு அஸ்திவாரம் இட்ட தினத்தையே, சீக்கியர்கள் தீபாவளியாகக் கொண்டாடியதாகவும் தகவல் உண்டு.