Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கந்த ... சோழவந்தான் கோயிலில் கந்தசஷ்டி விழா சோழவந்தான் கோயிலில் கந்தசஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா துவக்கம் : விரதம் துவக்கினர் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா துவக்கம் : விரதம் துவக்கினர் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

01 நவ
2016
11:11

துாத்துக்குடி: முருக பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில், சூரசம்ஹார விழா, நேற்று, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பக்தர்கள் புனித நீராடி, பச்சை ஆடை அணிந்து விரதம் துவக்கினர்; 5ம் தேதி, சூரசம்ஹாரம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, 1:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு, விஸ்வரூபம், 2:00 மணிக்கு, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன், யாக சாலையில் எழுந்தருள பூஜை துவங்கியது. மூலவருக்கு காலை, 9:00 மணிக்கு, உச்சிகால அபிஷேகம் நடந்தது. பின், யாகசாலையில், பூர்ணாகுதியுடன், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கடல், நாழிக்கிணற்றில் நீராடி, பச்சை ஆடை அணிந்து, அங்கபிரதட்சணம் செய்து விரதம் துவக்கினர். நவ., 5 மாலை, 4:30 மணிக்கு, கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது.

பழநி: பழநியில் துவங்கிய விழாவின் முதல் நாளான, நேற்று, மலைக்கோவிலில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையில் மூலவர் ஞானதண்டாயுதபாணி, உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், நவவீரர்களுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது.அதே நேரத்தில், பக்தர்களும் தங்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவங்கினர். இதை போல், திருஆவினன்குடி கோவில், பெரியநாயகியம்மன் கோவில்களிலும், முருகப் பெருமானை வழிபட்டு, ஏராளமான பக்தர்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர்.

சுவாமிமலை: முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காவது படைவீடாக, கும்பகோணம் அருகே உள்ள, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இங்கு, கந்த சஷ்டி திருவிழா, நேற்று காலை, 9:00 மணிக்கு, சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன், மலைக்கோவிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar