Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை ரங்கநாதப்பெருமாள் கோவிலில் ... வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம் வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

01 நவ
2016
11:11

திருப்பூர் :சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா, நேற்று துவங்கியது. காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று துவங்கியது. சுப்ரமணி சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு, அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள், காப்பு கட்டி விரதம் துவங்கினர். மலைக்கோவிலை வலம் வந்து, அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வர சுவாமி கோவிலில், சுப்ரமணிய சுவாமி எழுந்தருளினார். ஆறு நாள்களுக்கு இங்கு அருள்பாலிக்கும் சுப்ரமணியருக்கு, தினமும், காலை, 10:30 மற்றும் மாலை, 4:00க்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா , வரும், 5ம் தேதி மாலை, 5:00க்கு, நடக்கிறது. 6ம் தேதி, காலை 10:00க்கு, சிறப்பு அபிஷேக பூஜையும்; மாலை, 6:00 க்கு, சுவாமி திருக்கல்யாணமும் நடக்கிறது. 7 ம் தேதி, சுவாமி, திருமலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில், ஊதியூர் வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில், மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், அலகுமலை முத்துக்குமாரசாமி கோவில், கருமத்தம்பட்டி விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில், கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், திரிசதை அர்ச்சனை, சத்ரு சம்ஹார ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar