திருவள்ளூர்: திருவள்ளூர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மூல மந்திர ஹோமம் இன்று நடைபெறுகிறது.திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில் 32 அடி உயர பிரமாண்டமான விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூல நட்சத்திரத்திர தினமான இன்று, காலை 9:00 மணியளவில், மூலமந்திர ஹோமம் துவங்குகிறது. ஹோமம் நிறைவடைந்த பின், காலை 11:00 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறும்.