பதிவு செய்த நாள்
09
நவ
2016
12:11
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி வலம்புரி வெள்ளை விநாயகர், பாவாத்தம்மன், முத்துகுமாரசாமி கோவிலில் வரும், 11ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையெட்டி இன்று கோபூஜை, கணபதி ஹோமம், காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், முதல் கால யாக பூஜை நடக்கிறது. இவற்றை தொடர்ந்து, 11ல் காலை, 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும், வலம்புரி வெள்ளை விநாயகர், முத்துகுமாரசாமி, பாவாத்தம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.