பதிவு செய்த நாள்
09
நவ
2016
12:11
திம்மராவுத்தம்பட்டி: திம்மராவுத்தம்பட்டியில், செல்வ விநாயகர், சக்திமாரியம்மன், மதுரைவீரன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம், வரும், 18ல் நடக்க உள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், திம்மராவுத்தம்பட்டி அடுத்த, ஆலாங்காட்டுபுதூர் ஓடக்காட்டில், செல்வவிநாயகர், சக்திமாரியம்மன், மதுரைவீரன், கன்னிமார், அரசுவேம்பு உள்ளிட்ட கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து, வரும், 16ல், விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம், காவிரி ஆற்றில் புனிததீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாளிகை இடுதல், யாகசாலையில் முதல்கால யாக வேள்விகள் உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 17ல், ஆனைமுகன் வழிபாடு, இரண்டாம் கால பூஜை, கோபுர கலசம் வைத்தலும், 18 காலை, 8:00 மணிக்கு, கோபுர கலசத்திற்கு தீர்த்தம் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.