ஈரோடு: மழை வேண்டி, திண்டல் கோவிலில் வருண ஜெபம், நேற்று நடந்தது. தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், வட கிழக்கு பருவமழையும் இதுவரை பெய்யவில்லை. இந்நிலையில் மழை வேண்டி, திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில் வருண ஜெபம், யாக பூஜை நேற்று நடத்தப்பட்டது. கோவில் சிவாச்சாரியார்கள் ஆறு பேர், தேக்கி வைக்கப்பட்ட நீரில் நின்று, 108 முறை வருண ஜெபத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவிலில் வருண யாகம் நடந்தது. கடந்த, 15 ஆண்டுக்கு முன், இதேபோல் வருண ஜெபம் நடத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது நடத்தப்பட்டதாக, யாகத்துக்கு ஏற்பாடு செய்த கீழ் திண்டல், மேல் திண்டல் பகுதி மக்கள் தெரிவித்தனர்.