சபரிமலை: சபரிமலை வரும் தமிழக பக்தர்கள் வசதிக்காக பம்பையில் இருந்து கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்குகிறது.இதன்படி நேற்று முதல் கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பம்பை அரசு பஸ் ஸ்டாண்டில் இருந்து இந்த பஸ்கள் புறப்படும். இதுபோல புனலுார் வழியாக தென்காசிக்கு ஏழு, குமுளி, கம்பம், தேனி வழியாக பழநிக்கு நான்கு, இதே பாதையில் மதுரைக்கு மூன்று பஸ்கள் வீதம் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னைக்கு இரண்டு சபரி எக்ஸ்பிரஸ், இரண்டு சூப்பர் பாஸ்ட் பஸ்கள் இயக்கப்படும். தேனிக்கு மூன்று பஸ்கள் இயக்கப்படும். இதில் கோவைக்கு அதிகாலை 5 மணிக்கும், ஏழு மணிக்கும் பஸ்கள் புறப்படும். இதர பஸ்களின் நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பக்தர்கள் வருகையை பொறுத்து பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்