பதிவு செய்த நாள்
25
நவ
2016
12:11
திருப்பூர்: வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் கும்பாபிஷேக விழா, டிச., 1ல் துவங்கி, 5ம் தேதி வரை நடக்க உள்ளது. கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் ஜெயந்தி ஆய்வு நடத்தினார். கலெக்டர் பேசுகையில்,“அய்யன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, அதிகளவிலான பக்தர்கள் வருவர். போக்குவரத்து வசதிகளையும், வாகன நிறுத்துமிடங்களையும் ஏற்படுத்த வேண்டும். கோவில் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தெருவிளக்கு, குடிநீர் வசதிகளையும், ரோடு பணிகளையும் செய்ய வேண்டும். மருத்துவ வசதிகளை செய்வதுடன், இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள், தயார் நிலையில் வைக்க வேண்டும். பக்தர்கள் வரிசையாக சென்று தரிசனம் செய்ய ஏதுவாக, மூங்கில் தடுப்புகள் அமைக்க வேண்டும்,” என்றார். டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி, சப் கலெக்டர் ஷ்ரவன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.