பதிவு செய்த நாள்
25
நவ
2016
12:11
அவிநாசி: திருமுருகன்பூண்டி ஸ்ரீசாஸ்தா ஐயப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா, டிச., 5ல் நடைபெறவுள்ளது. திருமுருகன்பூண்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ கன்னிமூல கணபதி, சாஸ்தா ஸ்ரீ ஐயப்பசாமி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, டிச., 5ம் தேதி, காலை, 6:30 மணிக்கு மேல், 7:15 மணிக்குள் நடைபெறுகிறது. அவிநாசி வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில், திருமுருகநாத சுவாமி கோவில் அர்ச்சகர்கள் முன்னிலையில், விழா நடைபெறுகிறது. முன்னதாக, டிச., 3ல் காலை, 6:00 மணி முதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை; மாலை, 5:30 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடக்கிறது. 4ல் காலை, 9:00 மணிக்கு விநாயகர் பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்; மாலை, 5:30 மணிக்கு மேல், மூன்றாம் கால யாகபூஜை, விநாயகர் பூஜை, கண் திறப்பு பூஜை உள்ளிட்டவை நடைபெறவுள்ளது. வரும், 5ல் காலை, 5;30 மணிக்கு மேல், விநாயகர் பூஜை, புண்யாகம், கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. கொங்கு பண்பாட்டு மையம் சார்பில், பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ ஐயப்பா சேவா அறக்கட்டளை, அவிநாசி ஸ்ரீ சாய்பாபா மந்திர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.