பதிவு செய்த நாள்
26
நவ
2016
12:11
அவலுார்பேட்டை: செக்கடிக்குப்பத்தில் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, செக்கடிக்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கட்டுவது குறித்த பிரச்னைக்கு, செஞ்சி மக்கள் நீதிமன்ற நீதிபதிகளின் முயற்சியினால், கடந்த 12 ம்தேதி சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இப்பகுதியில் மாரியம்மன் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடந்தது. செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான், முன்னாள் எம்.எல்.ஏ., கணேஷ்குமார் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், பா.ம.க., நிர்வாகிகள் ராஜேந்திரன், அன்பழகன், முருகன், பா.ஜ., நிர்வாகிகள் ராஜேந்திரன், கோவில் நிர்வாகிகள் ஏழுமலை, கண்ணன், மூர்த்தி, குமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.