பதிவு செய்த நாள்
28
நவ
2016
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு, கோவிலுக்கு மேலும், நான்கு இணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், ஆண்டுதோறும், ஒரு கோவில் இணையர் மட்டுமே கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டு இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள மேலும், நான்கு பேர் இணைந்து, ஐந்து பேராக தீப திருவிழா ஏற்பாடு பணிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா, மற்ற இணை ஆணையர்களான வாசுநாதன், பரஞ்ஜோதி, தனபால், சுதர்சனம், ஆர்.டி.ஓ., உமாமகேஸ்வரி, டி.எஸ்.பி., சரவணகுமார் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். இதில், தீப திருவிழா முடியும் வரை, அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவது என, முடிவு செய்யப்பட்டது.