பதிவு செய்த நாள்
28
நவ
2016
12:11
ஆர்.கே.பேட்டை: காந்தகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில், அன்ன சத்திரம் கட்டப்பட்டு வருகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, காந்தகிரி (கொங்காமுடி) மலையடிவாரத்தில், அமைந்துள்ளது சாய்பாபா கோவில். இந்த கோவில், கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. வாரம் தோறும், வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜையும், தினசரி நித்ய பூஜைகளும் நடத்தப்படுகின்றன. அம்மையார்குப்பம், மோசூர், சந்திரவிலாசபுரம், சுந்தரராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், வந்து செல்கின்றனர். தற்போது, கோவிலில் நிழற்பந்தல் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கிழக்கு பகுதியில், சமையல் கூடம் மற்றும் அன்ன சத்திரம் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணி, விரைவில் முடிவடைந்து, அன்ன கூடம், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.