குமாரபாளையம்: குமாரபாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு கோவிந்த ராமானுஜ தாசர் வருகை புரிந்தார். குமாரபாளையம் அருகே உள்ள தட்டான்குட்டை பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலின் தலைமை நிர்வாகி கோவிந்த ராமானுஜ தாசர் வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. பின், ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்கார ஆராதனைகளை, கோவிந்த ராமானுஜ தாசர் செய்து வழிபட்டார். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.