Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி திருவிளக்கு வழிபாடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலையாண்டவர் கோவில் கும்பாபிஷேக பணி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2016
12:12

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் கும்பாபிஷேகப் பணிகளை கேரளா மாநிலம், பாலக்காடு நம்பூதிரிகள் பார்வையிட்டார். கடலுார் அடுத்த சி.என்.பாளையம் மலையில் புஷ்பகிரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆனால் இந்த கோவிலில் ஈஸ்வரன் சிலை இல்லாததால் கடந்த பல ஆண்டுகளாக பிள்ளையார் சுவாமியை முன்னிலைப்படுத்தி விழாக்கள் நடத்தப்படுவதால் இந்த கோவில் மலைபிள்ளையார் கோவில் என அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கோவில் முழுமையாக ஈஸ்வரன் கோவிலுக்கான அமைப்புகள் உள்ளது. இந்த கோவில் பழைய புராண ஏடுகளில் ராஜராஜேஸ்வரி சமேத  ராஜராஜேஸ்வரர் கோவில் என இருப்பதாக அறிந்து தற்போது இக்கோவில் ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவில் என மாற்றப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மகா கும்பாபிஷேகம் வரும் 4 ம் தேதி நடக்கிறது.

விழாவை முன்னிட்டு இன்று (1ம் தேதி) காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வரர், கணபதி பூஜையுடன் துவங்குகிறது. நாளை (2ம் தேதி) மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை நடக்கிறது. 3ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பகல் 12:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாத்துதலும், மாலை 6:00 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 4ம் தேதி காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடந்து 9:35 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று கேரளா பாலக்காடு பீதாம்பர பணிக்கர், மணிகண்ட நம்பூதிரிகள் அடங்கிய குழுவினர் கோவிலை பார்வையிட்டு சோழி போட்டு கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இதில் இக்கோவிலில் உள்ள சிவன் விக்கிரகம் சுயம்பு வடிவிலானது எனவும், இக்கோவில் சித்தர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இக்கோவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் போல கிரிவலம் செல்ல உகந்தது எனவும் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், கார்த்திகை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது. திருமலை ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே சிலுக்குவார்பட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா பல்வேறு காரணங்களால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
லண்டன்; தீபாவளி மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, லண்டனின் நீஸ்டனில் உள்ள பிஏபிஎஸ் ... மேலும்
 
temple news
ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar