பழநி முருகன் கோவிலில் தை சிறப்பு பூஜை: ஆனந்த விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2026 11:01
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு தை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலில் விசுவாவசு ஆண்டு தை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வெள்ளி கவச அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. திருவாவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.