சபரிமலையில் ஹெலிகாம் வீடியோ வெளியான சம்பவம் விசாரணை நடத்த தேவசம்போர்டு முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2016 12:12
சபரிமலை: சபரிமலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகாம் வீடியோ யூ-டியூபில் வெளியான சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.சபரிமலையில் பாதுகாப்பு பணிகளுக்காக இந்த ஆண்டு முதன் முறையாக ஹெலிகாம் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது. சில நாட்களாக சன்னிதான திருமுற்றத்தில் ஹெலிகாம் பறக்க விடப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. நேற்றும் நேற்று முன்தினமும் ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை சுற்றுவட்டார பகுதிகள் கண்காணிக்கப்பட்டது. சபரிமலைக்கு தீவிரவாதிகளல் அச்சுறுத்தல் உள்ளது என மத்திய அரசு எச்சரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையல் ஹெலிகாம் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சன்னிதான திருமுற்றத்தின் ஆகாய மார்க வீடியோ யூடியூபில் வெளியானது. பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியானது தேவசம்போர்டு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கேரள போலீஸ் டி.ஜி.பி., யிடம் போனில் பேசி போர்டின் எதிர்ப்பை தெரிவித்தார். இதை தொடர்ந்து அந்த வீடியோ தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.எனினும் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார். சன்னிதானத்தில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாம் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் ஸ்டுடியோவுக்கு சொந்தமானது என்பது முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. சன்னிதானத்தில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாம் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் ஸ்டுடியோவுக்கு சொந்தமானது என்பது முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது.