திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா துவங்குவதை முன்னிட்டு, வெள்ளை கோபுரத்துக்கு, ஆயிரங்கால் மண்டபத்துக்கும் இடையே பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.