பழநியில் குவிந்த பக்தர்கள்: மூன்று மணிநேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2016 10:12
பழநி: ஞாயிறு விடுமுறை தினத்தில் பழநி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மூன்று மணிநேரம் காத்திருந்தனர். கார்த்திகை திருவிழா, சபரிமலை சீசன் காரணமாக பழநி மலைக்கோயில் ஞானதண்டாயுதபாணிசுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் காத்திருந்தினர். மலைக்கோயில் பொது தரிசனவழியில் பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுத பாணிசுவாமியை தரிசனம் செய்தனர். இரவு 7.30 மணி தங்கரத புறப்பாட்டை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். சபரிமலை சீசனை முன்னிட்டு கிரிவீதிகள், அடிவாரரோட்டின் இருபுறத்தை ஆக்கிரமித்து நுாற்றுக்குமேற்பட்ட தள்ளுவண்டிகள், பழக்கடைகள், தட்டுவியாபாரிகள் வியாபாரம் செய்வதால் பாதவிநாயகர்கோயில், பூங்காரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.