Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் ஐயப்பன் கோயிலில் 18 படி ... காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவில் மாட வீதிகளில் துர்நாற்றம் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவில் மாட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழாவில் குளறுபடி திட்டமிடல் இன்றி அதிகாரிகள் அலட்சியம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழாவில் குளறுபடி திட்டமிடல் இன்றி அதிகாரிகள் அலட்சியம்

பதிவு செய்த நாள்

12 டிச
2016
11:12

வேலுார்: அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததால், திருவண்ணாமலை தீபத் திருவிழாவில், பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, நவ., 30ல் துவங்கி, வரும், 16ம் தேதி வரை நடக்கிறது. இதில், டிச., 3ல் கொடியேற்றம் துவங்கி, இன்று வரை, 10 நாட்கள், முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அண்ணாமலையார் கோவில், மூலவர் சன்னிதியில், இன்று அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும்; மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா பணிகளை கவனிக்க, அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் ஹரிபிரியா மற்றும் கூடுதலாக, நான்கு இணை ஆணையர்களை, இந்து சமய அறநிலையத்துறை நியமித்துள்ளது. இருப்பினும், சுவாமி புறப்பாடு, பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன அனுமதி சீட்டு விற்பனை, தீபத் திருவிழா பத்திரிகை வினியோகம் உள்ளிட்ட எல்லா பணிகளிலும், குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். குறிப்பாக, அனுமதி சீட்டு கேட்டு, கோவிலுக்கு கட்டளைதாரர்களும், உபயதாரர்களும் படையெடுத்தனர். ஆனால், மாலை, 6:00 மணி வரை, அவர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்படவில்லை. பரணி தீபத்துக்கு, 4,000 பேரும், மகா தீபத்துக்கு, 6,000 பேரும் அனுமதிக்கப்படுவர் என்றும், நெரிசலை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்றும், மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

10 டன் காய்கறி: திருவண்ணாமலையில் இன்று பல இடங்களில், பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு உதவும் வகையில், வேலுார் நேதாஜி மார்க்கட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில், எட்டு ஆண்டுகளாக, டன் கணக்கில் காய்கறிகள் இலவசமாக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி நேற்று, 10 டன் காய்கறிகள், வேலுாரில் இருந்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு:  திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள், போட்டோகிராபர்கள், 100க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவதிலும், தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, மாவட்ட எஸ்.பி., பொன்னி பேசுகையில், இத்தனை பத்திரிகையாளர்கள் கோவிலுக்குள் வர வேண்டிய அவசியம் இல்லை; ஓரிருவர் மட்டும் வந்தால் போதும். பத்திரிகையாளர்களால் தான் கோவிலில் பிரச்னை ஏற்படுகிறது, என்றார். அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள், எஸ்.பி., பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், மாவட்ட காவல் துறை நிர்வாகம், தன் நிலையில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இது, பத்திரிகையாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா இன்று ... மேலும்
 
temple news
 – நமது நிருபர் –: ‘‘சத்தியம் என்பது எப்போதுமே ஒன்று தான். எந்நிலையிலும் அது மாறாமல் ... மேலும்
 
temple news
 வில்லிவாக்கம்: ஹிந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் சார்பில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பைரவி திவ்ய பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar