Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் சிந்தனை- 3: ஆண்டவரிடம் ... மங்கையர் நலன்காக்கும்... மார்கழி மங்கையர் நலன்காக்கும்... மார்கழி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்கழி வழிபாடு: திருப்பூர் கோவில்களில் அதிகாலையில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மார்கழி வழிபாடு: திருப்பூர் கோவில்களில் அதிகாலையில் திரண்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 டிச
2016
12:12

திருப்பூர் : மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருப்பூர் சுற்றுப்புற கோவில்களில், சிறப்பு பூஜைகள் துவங்கியுள்ளன; பாசுரங்கள் பாடியபடி, அதிகாலையில், வீதிகளில் பஜனை நடைபெற்றது. "மாதங்களில் நான் மார்கழி என்று, பகவான் கிருஷ்ணர், கீதையில் கூறுகிறார். அந்தளவுக்கு புனிதமானதும், கட வுளுக்கு உகந்ததாகவும், தனுர் மாதம் விளங்குகிறது. இறை வழிபாட்டுக்கு உகந்த மார்கழி மாதம், நேற்று துவங் கியது. இதையொட்டி, அதிகாலையில் கோவில்களில் நடை திறக்கப்பட்டு, சுவாமி திருப்பள்ளி எழுச்சி மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

சிவன் கோவில்களில், திருவெம்பாவையும், பெருமாள் கோவில்களில் திருப்பாவையும் பாடப்பட்டன. வீடுகளின் முன்பு வண்ண கோலமிட்டு, பிள்ளையார் வைத்தும், பூசணிப்பூ வைத்து வழிபட்டனர். அதேபோல், அதிகாலையில், வீதிகளில் இசை வாத்தியங்களுடன், மார்கழி மாத பஜனை நடந்தது. திருப்பூர் அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம் சார்பில், குலாலர் விநாயகர் கோவிலில், திருப்பள்ளி எழுச்சியும்; விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருவெம்பாவையும், கன்னிகா பரமேஸ்வரி கோவில், வீரராகவ பெருமாள் கோவிலில், திருப்பாவை பாசுரங்களும் பாடப்பட்டன. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், விழா பூஜை சிவனடியார் திருக்கூட்டத்தினர், நேற்று அதிகாலை, நான்கு ரத வீதிகளில், வலம் வந்து, திருவெம்பாவை, சிவபுராணங்களை பாராயணம் செய்தனர். கரிவரதராஜ பெருமாள் கோவில், வீர ஆஞ்சநேயசுவாமி கோவில், ஐயப்பன் கோவில், சாய்பாபா கோவில் உள்ளிட்ட, அவிநாசி வட்டார கோவில்களில், மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பொன்னேரி: திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின்போது, அச்சுமுறிந்து தேர் கவிழ்ந்ததில் ... மேலும்
 
temple news
பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு, ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பீமன் வேடத்தில் வீதிகளில் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்: பெருமாநல்லுார், கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 25ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar