Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணர்கோயில் தெப்பம்: சீரமைக்க ... அலங்காநல்லுாரில் பூப்பல்லக்கில் ஐயப்பன் அலங்காநல்லுாரில் பூப்பல்லக்கில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரசிகர்களை மெய்மறக்க செய்த அமெரிக்க சகோதரிகளின் இசை கச்சேரி
எழுத்தின் அளவு:
ரசிகர்களை மெய்மறக்க செய்த அமெரிக்க சகோதரிகளின் இசை கச்சேரி

பதிவு செய்த நாள்

19 டிச
2016
11:12

சென்னை: அமெரிக்க சகோதரிகளின் இசை கச்சேரி, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. சென்னை, தி.நகரில் உள்ள தியாக பிரம்ம கான சபா மற்றும் ஓபுல் ரெட்டி, ஞானம்பா அறக்கட்டளை சார்பில், 37வது இசை, இயல், நாடக விழா, 12ம் தேதி முதல் நடந்து வருகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் இசை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இசை கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை, தி.நகரை சேர்ந்த, மென்பொறியாளர் ரவீந்திரன் – சித்ரா தம்பதி, அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தின் ரிச்மன்ட் நகரில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள்களான மாயா மற்றும் மாளவி இருவரும் படித்து வருகின்றனர்.

இவர்களின் கர்நாடக இசை கச்சேரி, நேற்று மாலை, வாணி மஹாலில் நடந்தது. சென்னையில் நடக்கும் மார்கழி இசை விழாவில், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இவர்கள் பாடி வருவதால், நிறைய ரசிகர்கள் வந்திருந்தனர். தியாகராஜ சுவாமிகள் இயற்றிய, தெளிய லேரு ராமா – திருவொற்றியூர் தியாகையர் இயற்றிய, வர்ணம் – புரந்தரதாசர் எழுதிய, ஜெய ஜெய – பாபாநாசம் சிவன் இயற்றிய, நீ இரங்கா எனில் – லால்குடி ஜெயராமன் இயற்றிய, தில்லானா பாடல்களை, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகளில் பாடி அசத்தினர். சங்கீதா திலீப் வயிலின் வாசித்தார்; குருராகவேந்திரன் மிருதங்கம் வாசித்தார்.இந்த இசை கச்சேரி, ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது.

இசை சகோதரிகள் கூறியதாவது: அமெரிக்காவில், பல இடங்களில் நடந்த கச்சேரியில் பாடியிருக்கிறோம். சொந்த மண்ணில் பாடும் போது மனதிற்கு சுகமான அனுபவமாக இருக்கிறது.  மனிதர்களுக்கு கல்வியும் கலையும்,  உயர்வையும் அமைதியையும் தரும். கல்வியிலும், இசையிலும்  உயர்வதே எங்கள் ஆர்வம். இந்திய கலாச்சாரம், எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.  இசை பயணத்தில் உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்க நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. இசையால், எல்லா வகையிலும் எங்களுக்கு சந்தோஷம் கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் துலா ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அம்மனுக்கு சிறப்பாக நடைபெற்ற சண்டி யாகம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழாவுக்கு இன்று ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: தேவபாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar