Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குப்பையண்ணசாமி கோவிலில் பொங்கல்: ... அய்யனார் கோயில் மண்டலாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாழடைந்த சோழர் கால சந்திரமவுலீஸ்வரர் கோவில்: புனரமைப்பு பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2016
02:12

ஓசூர்: ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் உள்ள பாழடைந்த சோழர் கால சந்திர மவுலீஸ்வரர் கோவிலை, பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து புனரமைத்து வருகின்றனர்.

ஓசூர் அடுத்த கெலமங்கலம் ஜீபியில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட சந்திர மவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், சோழர்கள் ஆட்சிக்காலத்தில் துவங்கி, ஒய்சாளர்கள், விஜயநகர பேரரசு என, மூன்று அரசுகளின் பராமரிப்பில் இருந்துள்ளது. ஆனால் கடந்த, 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், கோவில் கருவறை, அர்த்தமண்டபம், நீளமான முகப்பு மண்டபம் மற்றும், இரு தெப்பக்குளம் மோசமான நிலையில் உள்ளது. கோவில் கருவறையில் இருந்த மூலவர் சிலை, கெலமங்கலத்தில் காசிவிஸ்வநாதர் கோவிலில் வைத்து வணங்கப்பட்டு வருவதாக பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது. வரலாற்றை தாங்கி நிற்கும் சந்திரமவுலீஸ்வரர் கோவில் அர்த்தமண்டபத்தின் தூண்களில், கண்ணப்பநாயனாரின் சிற்பம், விநாயகர், நடனத்துடன் கூடிய இசை சிற்பங்கள், யானை, நந்தி மற்றும் மல்யுத்தம் செய்யும் சிற்பம் என ஏராளமான சிற்பங்கள் உள்ளன. கருவறையின் இடதுபுறத்தில், அனுமன் சிற்பமும் உள்ளது. நீளமான மகாமண்டபத்தின் நுழைவுவாயிலில் உள்ள இரு கற்தூண்களில், பெருமாளின் சங்கும், சக்கரமும் செதுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பல பெருமைகளை உள்ளடக்கிய இக்கோவில், தற்போது புதர்மண்டி கிடக்கிறது. இந்த கோவிலை சீரமைக்க, கெலமங்கலம் பகுதி பக்தர்கள், தன்னார்வலர்கள், வரலாற்று தேடல் குழுவினர் முடிவு செய்து, கடந்த, இரு ஞாயிற்றுக்கிழமைகளில், புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். பணி முடிந்த பின், கோவிலில் தினமும் பூஜைகள் செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar