பதிவு செய்த நாள்
15
பிப்
2026
09:02
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில், மகா சிவராத்திரி விழா நடந்தது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோயிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைக்கு நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். முதல் கால பூஜை ஏழு மணிக்கு, அபிஷேகத்துடன் துவங்கியது. வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், பன்னீர் இளநீர், சந்தனம், விபூதி உட்பட பதினாறு வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு, 8:00 சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் அர்ச்சகர் ஜோதி வேலவன் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகளை செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு, பிரசாதம், சுண்டல் உட்பட அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.