வால்பாறை : சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலை சுற்றி விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன. இதில், துர்க்கை அம்மனுக்கு வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது. மார்கழி மாதத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் நேற்று துர்க்கைஅம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும் நடந்தது.