கீழக்கரை: கீழக்கரை தட்டார்தெரு, உக்கிரவீரமா காளியம்மன் கோயிலில் அதிகாலை 4 மணி முதல் பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளுக்கு பின் சர்வ ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் நெய்விளக்கேற்றியும், சக்தி ஸ்தோத்திரம் பாடியும் வழிபாடு செய்தனர். புத்தாண்டு மற்றும் உலக சுபிட்சத்திற்காகவும், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.