பதிவு செய்த நாள்
03
ஜன
2017
11:01
ராமேஸ்வரம்:ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமேஸ்வரம் கோயிலில் சபாபதி சுவாமி, சிவகாமி அம்மன், பஞ்சமூர்த்திக்கு காப்பு கட்டுதல் நடந்தது.ஜன.,11ல் ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடக்க உள்ளதால், நேற்று கோயிலில் மாணிக்கவாசகர், அம்பலவாணர், சிதம்பரேஸ்வர் மற்றும் சபாபதி சுவாமி, சிவகாமி அம்மன், பஞ்சமூர்த்திக்கு கோயில் குருக்கள் காப்பு கட்டினர். இதனையடுத்து இன்று(ஜன.,3) முதல் மாணிக்கவாசகர் பல்லக்கில் புறப்பாடாகி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து சபாபதி சன்னதி முன்பு எழுந்தருளி திருவாசகம் பாடல்கள் பாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 8 நாட்கள் மாணிக்கவாசகர் புறப்பாடு உற்சவம் நடக்கிறது.இதன் பின் 9ம் நாளான ஜன.,11ல் சபாபதி சுவாமி, மாணிக்கவாசகருக்கு ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளிப்பார்.